Tuesday 6 May 2014


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்  தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் சாதனை

 Displaying IMG_0384.JPG


                  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்  தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் சாதனை  படைத்தனர்.கொட்டும் மழையில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து பாராட்டு பெற்று திரும்பினர்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் பிப்ரவரி மாதம் நடந்தது.தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

 தேர்வு முடிவுகள் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. 6695 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.   தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவர்கள் வல்லரசு,வசந்தகுமார்,சாருமதி ஆகிய மூன்று பேர்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

         சிவகங்கை மாவட்டத்தில் 5ம் இடத்தை இப்பள்ளி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்து மீனாள் ,சாந்தி,ஆகியோர் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.  

         மாணவர்கள்  அவர் தம் பெற்றோரும் கொட்டும் மழையில் வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இது குறித்து வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் ,நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எங்களின் வெற்றிக்கு ஆசிரியர்கள்,ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,மதுரை சங்கரன்,பெறோர்கள் விடா முயற்சியே காரணம்,அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,என மாணவர்கள் தெரிவித்தனர். 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு  முடிவுகள் முக்கியமானது.

                                   


பட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவ ,மாணவியர் மாநில அளவில் நடைபெற்ற   தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி பெற்றனர் . மாணவர்களுக்கு   தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் இனிப்புகள்  வழங்கி பாராட்டினர்..
 Displaying IMG_0385.JPG

No comments:

Post a Comment