Saturday 24 May 2014

3 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

சிதம்பரம் வட்டம், வண்டுராயன்பட்டு, காட்டுமன்னார்கோவில் வட்டம், மா.கொளக்குடி, விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் ஆகிய ஊர்களில்
உள்ள 3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஆணையினை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மதியழகனால் நிர்வாகத்திற்கு அண்மையில் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் அருணாச்சலம், உதவிக் கல்வி அலுவலர் வாசு, பள்ளி துணை ஆய்வாளர் கலிவரதன், வண்டுராயன்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் கவிதாபாரி, பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment