Monday 26 May 2014

ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அழைப்பு



திருச்சி: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள், தனியார் பள்ளியில் சேர மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை: திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீதம் இட ஒதுக்கீடு இடங்களுக்கு உரிய விண்ணப்பங்களை, அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
வரும், 31ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் இணைத்து, விண்ணப்பம் பெற்ற பள்ளியில் அளிக்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்திட ஏதுவாக, சேர்க்கை ஆணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment