பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி தொடக்கம்
பொறியியல்
படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம்
முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 27-ம்
தேதி வரை பெறப்பட்டன. இதையடுத்து
ரேண்டம் எண் வரும் 11-ம்
தேதி வெளியிடப்பட்டு, 16-ம் தேதி தரவரிசைப்
பட்டியல் வெளியிடப்படுகிறது. விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல்
16-ந்தேதி வரை நடைபெறும்.அதன்பின்னர் ஜூன் 23-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூன் 23 மற்றும் 24-ந்தேதி விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-ந்தேதி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும். ஜூன் 27-ந்தேதி முதல் ஜுலை 28-ந்தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தொழிற்பிரிவிற்கு ஜூலை 9 முதல் 20-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment