Thursday 29 October 2020
Wednesday 28 October 2020
Thursday 15 October 2020
இணையம் வழியாக மேதகு அப்துல்கலாம் அவர்களின் சிறப்புகளை ஆர்வத்துடன் கூறும் இளம் வயது மாணவர்கள் - வீடியோ - சிவகங்கை மாவட்டம் வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
https://www.youtube.com/watch?v=6mKmQz_egN8
https://www.youtube.com/watch?v=5ImuYqVUfcw
https://www.youtube.com/watch?v=EFxPf5wp3GM
https://www.youtube.com/watch?v=b3nyxWiCMgY
https://www.youtube.com/watch?v=-M9Yna5_Xv0
https://www.youtube.com/watch?v=AfTLOqlkZ9c
https://www.youtube.com/watch?v=PtlCJahPtkY
Wednesday 14 October 2020
Tuesday 13 October 2020
ஆளுமைகளுடனான அனுபவங்கள்
காகிதகங்கள் கொண்டு கவிதை எழுதுவது ஒரு கலை என்றால் காகிதங்களையே கவிதையாக மாற்றுவதும் கலைதான்.அதன் பெயர் ஓரிகாமி .
காகிதங்களை அழகுற வித விதமாக மடித்து கொக்கு,கிளி,பூங்கொத்து ,பந்து,கட்டடம் எனப் பற்பல உருவகங்களை உருவாக்கும் கலைக்கு ஓரிகாமி என்று பெயர்.
ஓரிகாமி பயிற்சியாளர் சேகர் அவர்களுடனான அனுபவங்கள் மறக்க முடியாதது.
ஓரிகாமி பயிற்சியாளர் தியாக சேகர் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு பள்ளி தொடர்பாக பாராட்டி எழுதிய வரிகள்
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு என்று காகிதங்களை பயிற்சிக்கு
வந்தேன் . மனதிற்கு மகிழ்ச்சி. அருமையான சூழல். சிறப்பான மதிய உணவு
.ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அருமை.
இன்று ஜப்பானிய ஓரிகாமி காகிதம் படிப்புகளை மாணவர்களிடையே பயிற்றுவித்து மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. கலகலப்பான மாணவர்கள். நன்றாக ஒத்துழைப்பு அளித்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர். அன்பு அருமை. குறிப்பாக மாணவர்களிடம் மேடை பயம் இல்லை. இது புது அனுபவம். இது சார்ந்து ஆசிரியர்களின் மெனக்கெடல் எத்தகையது என்பதை உணரமுடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சி .
மதிய உணவை சாப்பிட்டு விட்டு . எளிய ருசியான கீரை சாதம் .அருமையாக இருந்தது.மனதிற்கு மகிழ்ச்சி.
அன்புடன் தியாக சேகர்
Saturday 3 October 2020
ஆளுமைகளுடனான அனுபவங்கள்
ஹிந்தி, ஜப்பான் மொழி என பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுத்தவரும் , ஆளுமை பயிற்சியாளருமான விஸ்வநாதன் தம்பியண்ணா அவர்களுடனான அனுபவங்கள்
ஆளுமை பயிற்சியாளர் விஸ்வநாதன் தம்பியண்ணா அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு பள்ளி தொடர்பாக பாராட்டி எழுதிய வரிகள்
வாய்ப்பிற்கு நன்றி
சீரான தொடர் முயற்சி
சீக்கிரமே சிகரத்தின் உச்சி
இந்த வரிகளுக்கு இந்தப் பள்ளி
ஒரு முன் உதாரணம்
இங்கு வந்து சென்ற உலகளாவிய
ஆளுமைகளை அறிந்துகொண்டேன்
முறையான பணிகளை செய்வதும்
அதை ஆவணப்படுத்துவதும் அரிய கலை.
அதில் நானும் ஒருவனாக வந்து சென்றது மகிழ்ச்சி.
நன்றி.
வணக்கம்.
ஆ. விசுவநாதன்
ஆளுமை பயிற்சியாளர்
வைகை புத்தக நிலையம்
மதுரை.