Saturday 14 August 2021

 கொரோனா நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் பரிசு வழங்கி பெருமைபடுத்திய பள்ளி 

  அரசு மருத்துவர் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்கினார்
 
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா  







 


தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் அரசு மருத்துவர்  பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்கினார் . 

         ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை  தாங்கினார். மதுரை மருத்துவ கல்லூரியின் உதவி பேராசிரியரும், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் எலும்பு முறிவு மூட்டு மாற்று மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விவேக் கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்கினார். கொரோனா நேரத்தில் முன்கள பணியாளராக தனது பணியை சேவையாக செய்து வரும் தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரிக்கு பள்ளி சுதந்திர தின விழாவில் பரிசு வழங்கப்பட்டது.பள்ளியில் படிக்கும் பெற்றோர்களுக்கு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இணைய வழியில் போட்டிகள் நடைபெற்றது.அதனில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா,குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும்  சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.
 

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மதுரை மருத்துவ கல்லூரியின் உதவி பேராசிரியரும், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் எலும்பு முறிவு மூட்டு மாற்று மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விவேக் கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரிக்கு பள்ளி சுதந்திர தின விழாவில் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் அரசு மருத்துவர்   கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்க, அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் சேவையை பாராட்டி பரிசு வழங்கிய நிகழ்வு - வீடியோ 

 https://www.youtube.com/watch?v=vt8coCxEBdU





1 comment: