Monday 16 August 2021

 சத்துணவு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா முட்டை வழங்கல்

  நீதிபதி மாணவர்களுக்கு முட்டை வழங்கினார் 

  ஒவ்வொரு மாணவருக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 




 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி  சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா முட்டைகளை வழங்கினார்.

                               கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் திறக்காத நிலையில்,  சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக   வினியோகிக்கபட்டு வருகிறது. அதனுடன் ஒவ்வொரு மாணவருக்கும் முட்டைகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும்,உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கபட்டு வருகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா முட்டைகளை தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள், சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி சமையலர் சரசு  ஆகியோர் செய்து இருந்தனர். பெற்றோர்  சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன்   சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தமிழக அரசின் விலையில்லா முட்டைகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். 






 

No comments:

Post a Comment