Thursday 21 May 2020

பழகு தமிழில் பாங்காக  பேசக்கூடிய ஒரு மணி துளி போட்டி 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு மணித்துளி போட்டி பள்ளி வளாகத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பு மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் சவித்ரா என்ற ராஜாராம் குழுவினரால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலி கொடைக்கானல் பண்பலை 100.5 ல் வருகிற 23ம் தேதி நாளை சனிக்கிழமை பகல் 12.30 மணிக்கும், அகில இந்திய வானொலி மதுரை பண்பலை 100.3 ல் வருகிற 24ம் தேதி ஞாயிறு அன்று பகல் 12.02 மணிக்கும் தொடர்ந்து பல வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டியினை அனைவரும் கேட்கலாம் என்கிற தகவலை பள்ளியின் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.இப்போட்டியில் நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment