Wednesday 3 April 2019

ஆழ்ந்து சிந்திக்கலாம் பயிற்சி முகாம் 

சிந்திக்க தெரிந்தவன் சிந்தனைவாதி ,சிந்திக்க தெரியாதவர் முட்டாள் 

வாழ்க்கையில் வெற்றி பெற ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஆளுமை பயிற்சியாளர் பேச்சு


அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் நிறைவு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.





 

                                           ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் ஆழ்ந்து சிந்திக்கலாம் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசியதவாவது:சிந்திப்பது என்பது புதியதாக யோசிப்பது.வழக்கமாக ஒரு செயலை செய்வது சிந்திப்பது ஆகும்.புதியதாக ஒரு செயலை செய்வது ஆழ்ந்து சிந்திப்பது ஆகும்.வாழ்க்கையில் வெற்றி பெற ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும் .எப்பொழுதுமே எந்த ஒரு செயலை செய்வதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்து செயல் பட வேண்டும்.சிந்திக்க தெரிந்தவன் சிந்தனைவாதி ,சிந்திக்க தெரியாதவர் முட்டாள் என்று கூறி மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  பயிற்சி அளித்தார் .மாணவர்கள் கோட்டையன் ,காயத்ரி,அய்யப்பன்,மாதரசி,சந்தியா,வெங்கட்ராமன் ஆகியோர் ஆழ்ந்து சிந்திக்கலாம் என்பது பற்றி தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனர் சோம .நாகலிங்கம் எழுதிய அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி கையேடு திருச்சி பேரா .பஞ்சநாதன் உதவியுடன் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த தணிகை வேல் பாண்டியன் ஆழ்ந்து சிந்திக்கலாம் வாழ்வியல் திறன் பயிற்சி   அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
பின்குறிப்பு : அகம் ஐந்து,புறம் ஐந்து என்கிற பயிற்சியில் மொத்தம் பத்து தலைப்பில் இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ள  ஒன்பது தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு , உன்னிடத்தில் நான்,மாற்றி யோசி,கவனிக்கலாமா?, வாங்க பாராட்டலாம்,என்பது ஆகும்.தற்போது நடைபெற்றுள்ள மனசா புத்தியா,ஆழ்ந்து சிந்திக்கலாம் பத்தாவது   தலைப்பு ஆகும்.

No comments:

Post a Comment