Saturday 6 April 2019

                                        பரிசளிப்பு விழா 






தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சியின் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
                                            ஆசிரியை முத்துமீனாள் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.எல்.ஐ.சியின் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் செந்தில்வேல்,மகளிரணி பொறுப்பாளர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் செயலர் செல்வராஜ் மகளிர் முன்னேற்றம் குறித்து பேசினார்.பள்ளி மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்கள் கார்த்திகேயன்,காயத்ரி,அய்யப்பன்.முத்தய்யன் ,மாதரசி ஆகியோர் எல்.ஐ.சி.தொடர்பாகவும்,மகளிர் முன்னேற்றம் தொடர்பாகவும் பேசினார்கள்.சங்கத்தின் சார்பில் ஏராளமான ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சியின் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.எல்.ஐ.சியின் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் செந்தில்வேல்,மகளிரணி பொறுப்பாளர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் செயலர் செல்வராஜ் மகளிர் முன்னேற்றம் குறித்து பேசினார்.

No comments:

Post a Comment