Tuesday 16 April 2019

 பதக்கங்கள்  பரிசளிப்பு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பதக்கம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.






                                              ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.இப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஒய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கி மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பாடல்களை பாடி கருத்துக்களை சொல்லும் மாணவர்கள் ரதிபிரபா,அஜய்,ஹரிப்பிரியா,சபரீஸ்வரன்,சங்கரி,சரண்குமார்,
கனிஸ்கா,யோகேஸ்வரன்,அய்யப்பன்,
ராகேஷ்,
மாதவன்,காயத்ரி,ஜனஸ்ரீ ,முத்தய்யன் ,வெங்கட்ராமன்,ஆகாஷ் ,தேவதர்ஷினி,ஜெயஸ்ரீ உட்பட 18 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.பதக்கங்களை அனுப்பிய  பொறியாளர் துபாய் ரவி சொக்கலிங்கதுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.  நிறைவாக மாணவர் சபரி நன்றி கூறினார்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கி மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.இப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஒய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
                                           

No comments:

Post a Comment