Monday 1 August 2022

பரிசுகளை குவித்த மாணவர்கள் 

சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள் 





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

                                                           சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல்,இரண்டாம்,மூன்றாம் பரிசுகளை வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் மாணவர்களுக்கு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.மொத்தம் பத்து மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

 

பட விளக்கம் : சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல்,இரண்டாம்,மூன்றாம் பரிசுகளை வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

 

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=17u3dlitqD0

 

No comments:

Post a Comment