Wednesday 17 August 2022

 கண்ணை கட்டி கொண்டு செஸ் விளையாடி அசத்தல் 

இளம் வயதில் சதுரங்கம் விளையாடினால் பல வெற்றிகளை எளிதில் பெறலாம் - குவைத் மாணவர் பேச்சு 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குவைத் நாட்டில் பயிலும் மாணவர் கண்ணை கட்டி கொண்டு செஸ் விளையாண்டு மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.

                                                              ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.குவைத் நாட்டில் ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி முன்னிலை வகித்தார்.குவைத் நாட்டில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மித்திலேஷ் ரஞ்சித்குமார் கண்ணை கட்டி கொண்டு பிற மாணவர்களுடன் செஸ் விளையாண்டு அசத்தினார்.மாணவர்கள் அனைவரும் ஆச்சிரியமாக பார்த்தத்துடன் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.விளையாண்டு முடிந்த பிறகு மித்திலேஷ் மீண்டும் தான் நகர்த்திய காய்களையும்,தன்னுடன்  விளையாண்டவர் நகர்த்திய காய்களையும் மிக அழகாக நினைவில் வைத்து முழு விளையாட்டையும் நகர்த்தி காண்பித்தார்.கண்ணை கட்டி கொண்டு விளையாடுவதற்கு தொடர் பயிற்சியே காரணம் என்று கூறினார். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

 

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குவைத் நாட்டில் பயிலும் மாணவர் கண்ணை கட்டி கொண்டு செஸ் விளையாண்டு மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=PTdFVhD0X3w

No comments:

Post a Comment