சக மனிதர்களிடம் அன்பை காட்டுங்கள்
வங்கி மேலாளர் பேச்சு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம் சக மனிதர்களிடம் அன்பை காட்டுங்கள் என்று தமிழ்நாடு கிராம வங்கியின் மேலாளர் பேசினார்.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சர்வதேச நிறுவனம் அன்பை வெளிப்படுத்துங்கள் என்ற தலைப்பில் இணையம் வழியாக நடத்திய ஓவிய போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் மதியழகன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், உங்களின் குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவது போல் உங்களுடன் வாழும் சக மனிதர்களிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.அது இன்னும் அதிக அளவில் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று பேசினார்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச நிறுவனம் அன்பை வெளிப்படுத்துங்கள் என்ற தலைப்பில் இணையம் வழியாக நடத்திய ஓவிய போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் மதியழகன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
No comments:
Post a Comment