Friday 10 September 2021

 சிறந்த அரசு பணியாளருக்கு நன்றிகள் பல 


 

சிவகங்கை - தமிழக அரசு வழங்கும்  பள்ளி மாணவ மாணவிகளின் பெண் கல்வி ஊக்கத்தொகை பலருக்கும் வங்கி ,அஞ்சல் அக்கவுண்ட் எண்ணில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் பணம் ஏறவில்லை. இந்த தகவலை மிக தெளிவாக எடுத்து கூறி ஏறாத மாணவிகளின் அக்கவுண்ட் எண்ணை சரியான ஐஎஃப்எஸ்சி கோடு கொடுத்தால் வங்கியில் வரவு வைத்து தர சிறந்த முறையில் ஆவண செய்து தருவதாக ஆதிதிராவிடர் நலத் துறையில் உள்ள பிரசாந்த் என்பவரை சிவகங்கை நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். நானும் மாவட்ட ஆட்சியரகம் செல்லும்பொழுது நேரில் சென்று ஆதிதிராவிட நலத் துறையில் பணியாற்றும்  பிரசாந்த் அவர்களை சந்தித்தேன்.  மிக இனிமையான முறையில் என்னிடம் பேசி தகவல்களை பெற்று விடுபட்ட மாணவிகள் அனைவருக்கும் சரியான முறையில் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் வேறு பள்ளிகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு  யாருக்கேனும் விடுபட்டு இருந்தாலும் தன்னை தொடர்பு ( மொபைல் எண் : 8248120910) கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்தார்கள். அரசுப்பணியில் மிக இனிமையாக தகவல்களை எடுத்துக்கூறி சரியான நேரத்தில் உதவி செய்த இளநிலை உதவியாளர் பிரசாந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 தோழமையுடன் 

லெ . சொக்கலிங்கம்,

 தலைமையாசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment