பெரியார் பிறந்த தினம்: பள்ளியில் சமூக நீதி நாள் உறுதியேற்பு
தேவகோட்டை - பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமூகநீதி நாள் உறுதியேற்பை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்" என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் அறிவித்தார்.அதன்படி, தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும் எனவும், அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெரியாரின் பிறந்த நாளினை முன்னிட்டு , தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்!
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!' என, அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.
பட விளக்கம் : பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமூகநீதி நாள் உறுதியேற்பை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.
வீடியோ ;
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமூகநீதி நாள் உறுதியேற்பை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொண்ட வீடியோ
https://www.youtube.com/watch?v=DMi-9MVYl2g
No comments:
Post a Comment