Saturday 25 September 2021

 முதன்முறையாக மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி


 

 

 





















 

 

 

 

 மாணவர்கள் அரசின் விலையில்லா பொருள்களை பயன்படுத்தி படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் - துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேண்டுகோள்

தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி வழங்குதல்


தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம்   வழங்கப்பட்டது.

                         
                தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள்  ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர்.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம்
விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி ஆகியவற்றை தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காலைலிங்கம் வழங்கி பேசுகையில் , நாங்கள் படிக்கும் காலத்தில் மிகவும் சிரமமான சூழ்நிலையில் படித்தோம்.ஆனால் இப்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து விதமான பொருள்களும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.சத்துணவு சரிவிகித உணவாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் அரசின் சலுகைகளை பயன்படுத்தி நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும் என்று பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கேஷியர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.முதன்முறையாக மாணவர்கள் ஷுக்கள் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விலையில்லா ஷுக்கள் ,புத்தக பை ,காலணிகள் ,கலர் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி ஆகியவற்றை தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காலைலிங்கம் வழங்கி வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கேஷியர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

 

 




No comments:

Post a Comment