Wednesday 31 July 2019

டெங்கு விழிப்புணர்வு முகாம்
குணப்படுத்தக்கூடிய காய்ச்சல்தான் டெங்கு
காய்ச்சல் வந்தால் மருத்துவமனை செல்லுங்கள்
 
அரசு பொது மருத்துவர் வேண்டுகோள் 









தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
                            ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் சண்முகநாதபுரம்  சிவக்குமார் ,திருவேகம்பத்துர் முத்துவேல்,தொழுநோய் மேற்பார்வையாளர் செல்வம்,செவிலியர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை 6வது வார்டு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.அவர் பேசுகையில்,காய்ச்சல் வந்தால் கடைகளுக்கு சென்று நீங்களே மாத்திரை வாங்கி போட்டு சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.எந்தவொரு காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடியதுதான்.அதற்கு சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.என்று பேசினார்.நிகழ்வில் டெங்கு அறிகுறிகள் சார்ந்த விழிப்புணர்வு வீடியோ காண்பிக்கப்பட்டது.மாணவி நதியா கைகழுவும் முறை குறித்து விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தேவகோட்டை 6வது வார்டு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கினார்..தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.







மேலும் விரிவாக :


டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்
டெங்குவை  வருமுன் தடுப்பது மிக எளிது
 கடைகளுக்கு சென்று நீங்களே மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள்
 காய்ச்சல் வந்த உடன் உரிய சிகிச்சை பெறாவிட்டால்,வைரஸ் இரத்தத்தில் அதிகமாக பரவி குணப்படுத்த இயலாத நிலை ஏற்படும்.காய்ச்சல் வந்த மூன்று முதல் 14 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் தெரிய வரும்.பொதுவாக கண்ணனுக்கு பின்னால் வலி ஏற்படும்.

 மாணவர்கள் அய்யப்பன் ,ஸ்ரீதர் ,கோட்டையன்,வெங்கட்ராமன்,
சிரேகா ,ஈஸ்வரன்,நதியா உட்பட பல மாணவர்கள் டெங்கு தொடர்பான கேள்விகள் கேட்டனர்.அதற்கு சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார்,முத்துவேல் ஆகியோர் பதில்கள் கூறும்போது ;
                  நம்முடைய சோம்பேறிதனத்தின் ,கவனக்குறைவின் காரணமாகவே டெங்கு நம்மை விட்டு போகவில்லை.காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்து நான்காம் நாளில் சரியானால் அதை அப்படியே விட்டு விடுகிறோம்.நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது வெப்பம் அதிகமாகி விடுகிறது.முதலில் உடம்புக்குள் சிறை ,தமனி,இரத்த நாளங்கள் பாதிக்கபட்டு நீர் வெளியேற தொடங்கும்.பிறகு இதயம்,நுரையிரல் போன்ற திசுக்களில் நீர் கோர்த்துக்கொண்டு எட்டு அல்லது ஒன்பதாம் நாள்களில் மூச்சு விட முடியாமல் இறக்க நேரிடலாம் .மலம் கருப்பு கலரில் போக ஆரம்பிக்கும்.சிறுநீர் இரத்தமாக வரும்.டெங்கு காய்ச்சல் இருக்கும்போது நிலவேம்பு குடிநீர்,பப்பாளி சாறு,மாதுளம் பழம், ஆப்பிள்,திராட்சை இவற்றை ஜூஸ் ஆக அருந்த வேண்டும்.முதல் மூன்று,நான்கு நாட்களுக்கு நீர் அதிகம் அருந்த வேண்டும்.உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீங்கள் நன்றாக படிக்க இயலும்.நம் வீட்டையும் ,சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.ப்ர்ஜின் பின்புறம் உள்ள நீரை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.ஆட்டுக்கல்,வேண்டாத தொட்டிகளில் உள்ள நீரை கீழே ஊற்றி விடவும்.எல்லா வயதினருக்கும் டெங்கு வரலாம்.டெங்கு வருமுன் காப்பதே நல்லது.

 டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். 

டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது 
இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.
 பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. 
டெங்குவின் அறிகுறிகள் 
1. கடுமையான காய்ச்சல் 
2. தலைவலி 
3. உடல் அசதி 
4. உடல் வலி 
5. வாந்தி
6. வயிற்றுப்போக்கு
போன்றவை இருக்கும்
டெங்குவில் மூன்று வகை உண்டு 
1 .சாதாரண டெங்கு ஜூரம்
(dengue fever)
2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்(  dengue hemorrhagic fever) 
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் 
இதில் முதல் வகை வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி  என்று இருக்கும் 
இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது 
இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை ( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்  , மலத்தில் சிறுநீரில்    ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் 
அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும் 
டெங்குவிற்கு ரத்த பரிசோதனை
ரத்தத்தில் எலிசா (ELIZA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம். 
டெங்குவிற்கான சிகிச்சை முறை
டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும்.   ஆர் எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும். 
வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிறை வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும். 
காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது. 
குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும் 
டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை 
மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.
காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் 
போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். 
காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும். 
மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும் 
டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ?? 
மிக மிக எளிது 
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது 
ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும் 
வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள்  எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க 
தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள் 
தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும் 
ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது.  
நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் டெங்கு ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும். 
கடைசியாக 
தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். 
மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும் கட்டாயம் கைகளை வழலை கொண்டு கழுவ வேண்டும் 
இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல தொற்றும் நோய்கள் நமக்கு வருவதை தவிர்க்கலாம் 
டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்
டெங்குவை  வருமுன் தடுப்பது மிக எளிது .இவ்வாறு மருத்துவர் பேசினார்.

No comments:

Post a Comment