சமுதாயத்துக்கு உதவ உண்டியல் சேமிக்கும் பிஞ்சு மாணவர்கள்
இளம் வயதில் பிறருக்கு உதவவும் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கும் பள்ளி
உதவவும் மனப்பான்மையை ஏற்படுத்த உண்டியல்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையை பிஞ்சு மாணவர்களின் மனதில் ஏற்படுத்த பள்ளியில் உண்டியல் சேமிப்பு மூலம் அபார முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் புதுமையான முயற்சியாக கடந்த 2015ம் ஆண்டு முதல் உண்டியல் வைத்து சமுதாயத்துக்கு உதவவும் வகையில் மாணவர்கள் அவர்களாகவே வகுப்பில் உள்ள உண்டியலில் காசு போடுகின்றனர்.
பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்லும் நிலையிலும்,தங்களுக்கு பெற்றோர் எப்போதோ ஒருமுறை வழங்கும் காசில் மிச்சம் செய்து , ஒரு ரூபாயோ,இரண்டு ரூபாயோ அதனை உண்டியலில் போடுகின்றனர்.தங்களின் பிறந்த நாளில் பெற்றோர் கொடுத்த காசையும் உண்டியலில் போடுகின்றனர்.இதனால் வறுமையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற மனித நேயம் வளர்கிறது.பிஞ்சு மனதில் நல்ல எண்ணங்கள் பசுமரத்து ஆணிபோல் பதிந்து விடுகிறது.பிற்கால இளைய சமுதாயம் இன்னும் சிறப்பாக வளர இதுபோன்று செயல்பாடுகள் அதிகம் உதவி செய்யும் என்பது உண்மை.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
எங்கள் பள்ளியில் நாங்கள் தொடர்ந்து பல வருடங்களாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் உண்டியல் வாங்கி கொடுத்துள்ளோம். அதனில் அவர்களால் முடிந்த காசை , "சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் "என்று கூறி சேமிக்க சொல்லி வருகிறோம்.அடிக்கடி இவ்வாறு நல்ல சொற்களை சொல்லி காசு போடுவதால் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கம் வருகிறது.பள்ளியில் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலும் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ஆண்டுகளாக உண்டியல் சேமிப்பு பணத்தோடு ,பள்ளி நிர்வாகம்,ஆசிரியர்கள் சேர்ந்து இதுவரை முக்கியமான சமுதாய உதவிகளை செய்து உள்ளோம்.குறிப்பாக
2015 ம் ஆண்டு சென்னை வெள்ள நிவாரணத்துக்கு 8,000 ரூபாய் மதிப்பிலான போர்வைகள் வாங்கி அனுப்பியது, நாளிதழின் மூலம் வந்த தகவலின் வழியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சென்னை பாட்டி இளவரசி பேரனுக்கு மருத்துவ உதவியாக 6,000 ரூபாய் காசோலை அனுப்பியது,செய்த உதவி,கேரளா வெள்ள நிவாரணத்துக்கு 8,000 ரூபாய் பணம் அனுப்பியது, கஜா புயலுக்கு 11 மூடை அரிசி அனுப்பி உதவியது என எங்களது உதவி தொடர்கிறது என்று கூறினார் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சமுதாயத்துக்கு உதவவும் வகையில் உண்டியலில் காசு சேமித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment