Sunday 28 July 2019

அனைவருக்கும் ,வணக்கம்.வருகிற 31/07/2019 ,புதன்கிழமையன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சி காஞ்சாத்து  மலை உச்சியில் உள்ள முருகனுக்கு காலை 8 மணி அளவிலும்,சுமார் 10 மணி அளவில் முனீஸ்வரருக்கும் அனைத்து விதமான பழங்கள் கொண்டு அபிஷேகம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற உள்ளது.மதியம் 12 மணி அளவில் அனைவருக்கும் மதிய உணவு அன்னதானம் நடைபெற உள்ளது . அபிஷேகம் மற்றும் அன்னதானம் நிகழ்வில் பங்குகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.மலைமீது சுனை நீரில் காலையில் நன்றாக குளிக்கலாம்.அதிகாலை முதலே சுனை அருகே புரோகிதம் செய்பவர்களும்   இருப்பார்கள்.கல்வெட்டுகள் அதிகம் உள்ள மலை பகுதி என்பது கூடுதல் சிறப்பு.நன்றி.
லெ .சொக்கலிங்கம் ,
வேகுபட்டி.

No comments:

Post a Comment