Monday 22 July 2019

 சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெற பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை








தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட வேண்டி காலை இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்   மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.முன்பு நடைபெற்ற கோளாறுகளை சரிசெய்து ,விட முயற்சியுடன் ,நம்பிக்கையுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய உள்ள சந்திராயன் -2 யை வடிவமைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ,தலைவர் சிவன் அவர்களது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய காலை இறைவணக்க கூட்டத்தில் வழிபாடு செய்த பள்ளி மாணவர்கள்  .

No comments:

Post a Comment