Thursday 11 July 2019

நல்வழி,மூதுரை,நன்னெறி ஒப்புவித்தல் போட்டி




                              தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நன்னெறி,நறுந்தொகை,கொன்றைவேந்தன் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.                                   


                 ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை முத்துமீனாள்  போட்டிகளை நடத்தினார். ஆத்திசூடி ,கொன்றைவேந்தன்,நறுந்தொகை,மூதுரை,
நல்வழி,நன்னெறி,நீதிநெறி விளக்கம் ஆகிய பாடல்களில் முறையே மாணவர்கள் அஜய்,யோகேஸ்வரன்,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ,நதியா,ஈஸ்வரன்,சிரேகா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுபெற்றனர். நிறைவாக மாணவர் சபரி  நன்றி கூறினார்.

 
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற
நல்வழி,மூதுரை,நன்னெறி ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கினார்.


No comments:

Post a Comment