Thursday 28 February 2019

ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் கலந்துரையாடல் 






             தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடல்
நடைபெற்றது.                                                          
                                            ஆசிரியர் கருப்பையா   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் இணை  செயலர் சொர்ணாம்பாள்  முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கல்வி தொடர்பான முன்னேற்றம் குறித்து பெற்றோர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில் அளித்தனர்.பெற்றோர்கள் சார்பாக வைதேகி ,சொர்ணம்பிகா ,கஸ்தூரி  ஆகியோர் பள்ளியின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள்.பொங்கல் விழாவில் அழகாக கோலங்கள் போட்ட பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடல்   நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment