Tuesday 26 February 2019

ஆளுமை பயிற்சி  முகாம்

 மனித நேயம் எல்லோரிடமும் வளர வேண்டும் 
 மனிதவள பயிற்சியாளர் பேச்சு






தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆளுமை  பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                  ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் ஜோஸ் அந்தோணி   பிறர் நிலைகளை உங்களுக்குள் வைத்துப்பார்ப்பதுதான் உன்னிடத்தில் நான் என்பதாகும் என்ற தலைப்பில் எம்பதி   தொடர்பாக விளையாட்டு முறையில் செயல்பாடுகள் செய்து மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் புரியும் வகையில் பயிற்சி அளித்தார் .மாணவர்கள் சந்தியா,காயத்ரி,சபரி,நித்திய கல்யாணி,கீர்த்தியா ,சிரேகா ,காவியா,அய்யப்பன் ,கார்த்திகேயன் ஆகியோர் எம்பதி  தொடர்பாக தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த ஜோஸ் அந்தோணி எம்பதி     என்கிற தலைப்பில்  ஆளுமை  பயிற்சி அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment