Friday 8 February 2019

தேசிய குடற்புழு நீக்க தினம் 
மாணவர்களின்அறிவை குறைக்கும் குடற்புழுக்கள்

அரசு பொது மருத்துவர் தகவல் 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சியை குடற்புழுக்கள் குறைக்கின்றன என்று அரசு பொது மருத்துவர் பேசினார்.

            நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் தமீம் அன்சாரி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசுகையில் , குடற்புழு மாத்திரைகள் வருடம் இரண்டு முறை வழங்கப்படுகிறது.குடற்புழுக்கள் பொதுவாக நமது கையின் வழியாக சரியாக கழுவாமல் சாப்பிடும்போது நமக்கே தெரியாமல் மைக்ரோ அளவில் கையில் ஒட்டி கொண்டு வயிற்றின் உள்ளே சென்று பெரிதாக வளர்ந்து ,நாம் சாப்பிடும் உணவை அது சாப்பிட்டு நமக்கு சுகவீனம் மற்றும் அசதி ,சோர்வு,படிப்பில் கவனமின்மை ஏற்படுகிறது.இதனால் உடல் மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சி தடைபடுகிறது.இதனை நீக்க மாணவர்கள்  அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) உட்கொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்கிறேன் என்று பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்  நன்றி கூறினார்.



பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் தமீம் அன்சாரி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment