Thursday 3 November 2022

அகில இந்திய  வானொலியில் பள்ளி மாணவர்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று  அசத்தல்
 
 


மதுரை - ஆக - அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி   சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.

                                                          அகில இந்திய மதுரை வானொலி நிலையத்திற்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவ்யஸ்ரீயை  சிறப்பு விருந்தினராக பங்கேற்க  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வானொலி நிலையத்தருடன் பேசி தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றார்.மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர்கள் ஜேக்கப் ஜெப ரூபன் , புகழ் மாரிமுத்து ஆகியோர் மாணவியை  வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். கண்ணாடி மாளிகை என்கிற நிகழ்ச்சியில் மாணவி   ஒரு மணி நேரம் முழுவதும் நேரலையில் நேயர்களுடன் தொலைபேசி வழியாக சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.அகில இந்திய மதுரை வானொலியில் மாணவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செயல்படும் இந்நிகழ்வில் மாணவி திவ்யஸ்ரீ பங்கேற்று தேர்ந்த   முறையில் நேயர்களுடன் பேசி ஒருங்கிணைத்தது பாராட்டுக்குரியது என நிகழ்ச்சி  பொறுப்பாளர் புகழ் மாரிமுத்து வாழ்த்து தெரிவித்து மாணவருக்கு  புத்தகம் பரிசாக வழங்கினார். ஒலிப்பதிவில் உறுதுணையாக நெறியாளர் விக்னேஸ்வரி    உடனிருந்தார். மாணவிக்கு பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி   பயிற்சி அளித்திருந்தார். எட்டாம் வகுப்பு மாணவர்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று வானொலியில் ஒரு மணி நேரம் முழுவதும் நேரலையில் நேயர்களுடன் பங்கேற்றது  பாராட்டுக்குரியது என நேயர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.


பட விளக்கம் : அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி திவ்யஸ்ரீ நேரலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.நிகழ்ச்சி  பொறுப்பாளர் புகழ் மாரிமுத்து  முன்னிலையில்  நிகழ்ச்சி நடைபெற்றது.

 

வீடியோ :

 

 https://www.youtube.com/watch?v=jmt2KO7fhrc


No comments:

Post a Comment