Tuesday 8 November 2022

 மாணவிகளுக்கு பாராட்டு  

 பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று ரூபாய் 1500 பரிசு பெற்ற மாணவிகள் 

 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  சைவ,சமய பேச்சு போட்டிகளில் பங்கு பெற்று ரூபாய் 1500 பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

                                  
                       பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில்  பட்டுக்கோட்டையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இணையம் வழியாக சைவ ,சமய பேச்சு போட்டிகளை   நடத்தினார்கள்.இதனில் இப்பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள்  ஆர்வத்துடன் பங்குபெற்றனர். மாணவிகள் கனிஷ்கா மற்றும் கனிகா ஆகியோர் முறையே ரூபாய் 500,1000 பரிசுகளை வென்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு பணத்தை வழங்கினார்.போட்டிகளில் மாணவர்களை பங்கு பெற வைத்த ஆசிரியை முத்துலெட்சுமிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்   பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை இணையம் வழியாக நடத்திய சைவ,சமய பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் ,சான்றிதழ்களையும்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment