Tuesday 6 September 2022

 நாளிதழ் பார்த்து கடிதம் வழியாக வாழ்த்து அனுப்பிய வாசகர் 

குவியும் பாராட்டுகள்




தேவகோட்டை - நாளிதழில் வெளியான மாணவி வரைந்த ஓவியத்தை பார்த்து கடிதம் எழுதிய வாசகருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

                                              சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மு.பிரதிக்சா வரைந்த ஓவியம் தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் தமிழகம் முழுவதும் வெளியானது.இதனை பார்த்து மகிழ்ந்த எண்ணற்ற வாசகர்களில்  திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அண்ணா நகரை சேர்ந்த வி.அலெக்ஸாண்டர் ( அலைபேசி : 8015313993) என்பவர் மாணவியை பாராட்டி ,வாழ்த்து தெரிவித்து பள்ளிக்கே கடிதம் அனுப்பி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.நவீன இணையம் இயங்கும் அதிவேக உலகில் குறுஞ்செய்தி அனுப்ப கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் பாராட்ட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மெனக்கெட்டு தபால் வாங்கி , வாழ்த்து எழுதி ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி உள்ள செயல்பாடு பாராட்டுக்குரியது என்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மு.பிரதிக்சா வரைந்த ஓவியம் தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் தமிழகம் முழுவதும் வெளியானது.இதனை பார்த்து மகிழ்ந்த எண்ணற்ற மனிதர்களில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அண்ணா நகரை சேர்ந்த வி.அலெக்ஸாண்டர் ( அலைபேசி : 8015313993) என்பவர் மாணவியை பாராட்டி ,வாழ்த்து தெரிவித்து பள்ளிக்கே கடிதம் அனுப்பி ஆச்சரியப்படுத்தி உள்ளார்

No comments:

Post a Comment