மாநில அளவிலான போட்டிகளில் அதிக பரிசுகளை குவித்த மாணவர்கள்
வட்டாட்சியர் பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேவகோட்டை வட்டாட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில் பள்ளியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இணையத்தின் வழியாக பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது . இதனில் இப்பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்று ரூபாய் 3250யை பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பங்கேற்ற மாணவர்களுக்கும் தேவகோட்டை வட்டாட்சியர் செல்வராணி தலைமை தாங்கி பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேவகோட்டை வட்டாட்சியர் செல்வராணி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=m3dRIZpWlKA
No comments:
Post a Comment