Monday 5 September 2022

 ஆசிரியர் தின விழா 

ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து  கொடுத்து மாணவர்கள் வாழ்த்து

 





 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
                                                   ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் தினம் தொடர்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் .முத்துலெட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment