தேவகோட்டை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறையினரால் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜோதி முன்னிலை வகித்தார்.தேவகோட்டை போக்குவரத்து காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் கலா மாணவர்களிடம் பேசுகையில், சிற்பி திட்டம் என்பது மாணவர்களை சிறு வயதில் நல்வழிபடுத்துவதற்காக காவல் துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் கவனமாக இருங்கள்.போதை பொருளால் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது.இளம் வயதில் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் நல்ல விஷயங்களை செய்து பெருமை கொள்ளுங்கள்.என்று பேசினார்.முதல்நிலை காவலர் தேவிகா உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறையினரால் மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஒழிப்பு வழங்கப்பட்டது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=Tk9WRwH3QV0
https://www.youtube.com/watch?v=XeVVx2-6M6k
https://www.maalaimalar.com/news/state/sirpi-plan-benefits-512421
https://www.maalaimalar.com/news/state/sirpi-plan-benefits-512421
https://www.maalaimalar.com/news/state/sirpi-plan-benefits-512421
No comments:
Post a Comment