Thursday 22 September 2022

 ஓசோனை பாதுகாக்க விழிப்புணர்வு போட்டிகள் 


 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

                  ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஓசோனை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது. மிகச் சிறப்பாக பேசி வெற்றி பெற்ற மாணவிகள் ஜெயஸ்ரீ மற்றும் ஹரி பிரியாவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓசோன் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார்.


No comments:

Post a Comment