Friday 23 September 2022

 நிலவேம்பு குடிநீர் வழங்குதல் 


பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 












 தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.



                          ஆசிரியர் ஸ்ரீதர்    வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம்   நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு  வழங்கினார் . பள்ளி  மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்கபட உள்ளது .டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.நகராட்சி துப்புரவு பணி  மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சக்திவேல்,டெங்கு பணியாளர்கள் வள்ளி,சித்திகா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஆசிரியை செல்வ மீனாள்   நன்றி கூறினார்.



 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு  
குடிநீர் கசாயம் வழங்கினார்.


வீடியோ :

https://www.youtube.com/watch?v=E-IzwDgi9Sw

No comments:

Post a Comment