Monday 7 March 2022

உலக மகளிர் தினம் 

பெருமை மிகு பெண் வெற்றியாளர்கள்  நாடகம் நடித்து அசத்திய மாணவர்கள் 

 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் நாடகம் நடைபெற்றது.

                                                              நிகழ்வில் ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மாணவிகள் நதியா டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சாதனைகள் பற்றியும், அனைத்து மாணவிகளும் பங்கேற்ற பெருமை மிகு பெண் புரட்சியாளர்கள் நாடகமும், பெண்கள் நாங்கள் செய்த சாதனைகள் என்கிற தலைப்பில் மாணவிகள் திவ்யஸ்ரீ,வள்ளியம்மை ஆகியோர் கவிதையும் கூறினார்கள்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.சிறப்பாக பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பெற்றோர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச பெண்கள் தினத்தினை முன்னிட்டு அனைத்து  மாணவிகள் பங்கேற்ற நாடகம் நடைபெற்றது.

 

 

வீடியோ : 

 

          https://www.youtube.com/watch?v=81ITNO3KWdc

 

No comments:

Post a Comment