நியாயத்தின் மீது விருப்பம் கொள்ளுங்கள்
நேர்மையின் மீது நம்பிக்கை வையுங்கள்
அறக்கட்டளை நிர்வாகி பேச்சு
தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு
,அபிராமி அந்தாதி ,திருப்புகழ் போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஓதுதல் பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை நிருவாகி சரவணன், முன்னாள் துணை ஆட்சியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் பள்ளி அளவில் மாணவர்களுக்கு நடைபெற்ற தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு ,அபிராமி அந்தாதி, திருப்புகழ் பாடும் போட்டிகளிலும் , பேச்சு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஓதுதல் பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பட்டுக்கோட்டை சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை நிருவாகி சரவணன், முன்னாள் துணை ஆட்சியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் பள்ளி அளவில் மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=Dsuq18GOxx8
https://www.youtube.com/watch?v=EPgfewtCUzQ
https://www.youtube.com/watch?v=LD1gf2YDxhE
No comments:
Post a Comment