Friday 27 November 2020

 சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

  நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாணவர்களுக்கு முட்டை வழங்கினார் 

  மூன்றாம் முறையாக ஒவ்வொரு மாணவருக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 








 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகளை மூன்றாம் முறையாக தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் வழங்கினார்.

                               கொரோனா தொற்று பரவலால் சில  மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக   வினியோகிக்கபட்டது. அதனுடன் ஒவ்வொரு மாணவருக்கும் முட்டைகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும்,உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் கடந்த இரண்டு முறை வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா முட்டைகளை மூன்றாம் முறையாக தேவகோட்டை  நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள், சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி சமையலர் சரசு  ஆகியோர் செய்து இருந்தனர். பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று முட்டைகளை வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.தொடர்ந்து சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா அரசி,பருப்பு,முட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் பெற்றோர்களுக்கு  கொரோனா குறித்தும்,டெங்கு குறித்தும் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் பல்வேறு தகவல்களை விளக்கமாக எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்  .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். 

முட்டை வழங்கிய வீடியோ 

https://www.youtube.com/watch?v=mqLeX10U4O8


டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக பேசும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் - வீடியோ 

https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg?view_as=subscriber

No comments:

Post a Comment