Wednesday 4 November 2020

  மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதையும் ,சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைபிடியுங்கள் - துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேண்டுகோள்

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

மூன்றாவது முறையாக அரசி , பருப்பு  வழங்குதல் 

டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க கவனமாக இருங்கள் - துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சு  

 






 

  அரிசி ஆறு கிலோ 150 கிராமும் , பருப்பு இரண்டு கிலோ 296 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

                               கொரோனா தொற்று பரவலால் சில  மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், கடந்த ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக  சில நாட்களுக்கு முன்பு வினியோகிக்கபட்டது. அதனுடன் ஒவ்வொரு மாணவருக்கும் முட்டைகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும்,உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது.  இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர் பொருள்களை தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம் ) ஜோதி நாதன் வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதையும் ,சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைபிடியுங்கள். கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு அதிகம் செல்வதை தவிர்த்து விடுங்கள்.டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க உங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்க விடமால் பார்த்துக்கொள்ளுங்கள்.தமிழக அரசின் விலையில்லா அரசி,பருப்பு அருமையாக உள்ளது.மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க உங்களை சுற்றி இருப்பவர்களை ஆர்வப்படுத்துங்கள் .இவ்வாறு பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள், சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி, சமையலர் சரசு  ஆகியோர் செய்து இருந்தனர். அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பொருள்களை பெற்றுச் சென்றனர். மாணவர்கள் வரமுடியாத பட்சத்தில் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.தொடர்ந்து இரண்டு முறை விலையில்லா முட்டைகளும், மூன்றாவது முறையாக அரசி,பருப்பும் பெற்றது  தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.கடந்த மாதத்தில் முதல் தவணையாக மூன்று மாதங்களுக்கு அரிசியும்,பருப்பும் , முட்டையும் வழங்கப்பட்ட நிலையில்  இரண்டாம் முறையாக தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு 65 நாட்களுக்கு உண்டான அரசியும்,பருப்பும்,  விலையில்லா முட்டையும் வழங்கப்பட்டது .  தற்போது  41 நாட்களுக்கான அரசியும்,பருப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம் ) ஜோதி நாதன் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்  .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ,சமையலர் சரசு ஆகியோர் செய்து இருந்தனர். 

 

 

 

 

 

No comments:

Post a Comment