Friday 22 November 2019

 ஊக்கப்படுத்தும் கடிதம் எழுதிய ஆசிரியருக்கு நன்றி 




மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் அவர்களுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடிய நிகழ்வு தினமலர் நாளிதழின் தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி பதிப்புகளில் வெளியாகியிருந்தது .அதனை படித்து பள்ளிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை  சேர்ந்த தாமோதரன் ஆசிரியர் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . மிக அருமையான ஊக்கப்படுத்தும் வார்த்தைகளோடு ஆசிரியர் அவர்கள் அனுப்பியுள்ள தகவல் எங்களுக்கு மேலும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.அன்னாருக்கு நன்றிகள் பல. நன்றிகள் பல.
அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment