Tuesday 25 June 2019

 மக்கள் குரல் செய்தி ஆசிரியர் திரு.முத்து குமார் அவர்களுடனும்,மூத்த பத்திரிகையாளர் திரு.ராம்ஜீ அவர்களுடனும் ஒரு சந்திப்பு 



மக்கள் குரல் மூத்த பத்திரிகையாளர் ,தலைமை செய்தி ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி :

                              முதல் நாள்  மக்கள் குரல் மூத்த பத்திரிகையாளர் திரு.ராம்ஜி அவர்களை சந்தித்தபோது எனக்கு அவரது குரலை மட்டுமே இரண்டு ஆண்டுகளாக கேட்டு,அன்றுதான் நேரில் சந்தித்தபோது மிகவும் ஆச்சரியம். அவரது பிஸியான பணிகளுக்கு இடையில் எனக்கு நேரம் ஒதுக்கி சந்தித்தவுடன்,முதலில் அவர்களது தலைமை செய்தி ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களை அறிமுகப்படுத்தி பேச சொன்னார்கள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.திரு.முத்துக்குமார் அவர்களும் என்னிடம் அன்பாக பேசினார்கள்.பிறகு திரு.ராம்ஜி அவர்கள் எனக்கு நாடகம் பார்க்க பாஸ் கொடுத்தார்கள்.ஆனால் என்னால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செல்ல இயலவில்லை.இரவு போன் செய்த திரு.ராம்ஜி அவர்கள் என்னிடம்,உடலை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்,இதனை விட பெரிய நிகழ்வுக்கு அடுத்த முறை செல்வோம் என்று கூறினார்கள்.நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

No comments:

Post a Comment