Monday 3 June 2019

புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி






தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  புதியதாக சேர்ந்த மாணவர்களை 
ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
      கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு  புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்கள்    ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்  கருப்பையா ,  முத்து மீனாள் ,செல்வமீனாள் ஆகியோர்  வரவேற்பு நிகழ்விற்கான  ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் புதிய மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்கள்   ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்

No comments:

Post a Comment