Friday 21 June 2019

 மாணவர்களுக்கு பாராட்டு 

பல்கலைக்கழக துணைவேந்தர் பரிசுகளை வழங்கி பாராட்டுதல்
 






தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

                         பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் மாணவர்களுக்கு விகடன் இதழின் அழகான பரிசினை வழங்கி பாராட்டினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ரோபோ பயிற்சியாளர் கெனித் ராஜ்,துணைவேந்தரின் உதவியாளர் சேகர்,சென்னை முருகப்பெருமாள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி அளவில் சிவகங்கை,ராமநாதபுரம் ,புதுகோட்டை மாவட்ட அளவில் பங்கேற்ற ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில்  இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஏழாவது    ஆண்டாக கலந்து கொள்வது பாராட்டத்தக்கது.நிறைவாக ஆசிரியை முத்தமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வார இதழின் பரிசுகளை மாணவிகளுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ரோபோ பயிற்சியாளர் கெனித்  ராஜ் ஆகியோர் உடன் உள்ளனர். 






மேலும் விரிவாக :

விகடனின் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி!
தொடர்ந்து ஏழாவது   ஆண்டாக பங்கேற்பு

விகடன்  இதழ் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி காரைக்குடி  மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாகமாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

                     அரசு விடுமுறை நாளன்று பெற்றோர் செல்ல இயலாத நிலையில்    காலை  7.50 மணிக்கெல்லாம் மாணவர்களை  ஆசிரியர் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு க்கு அழைத்து சென்றார்.அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி அளவில் சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்ட அளவில் இப்பள்ளி மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மதியம் 2 மணிக்கு போட்டிகள் முடிந்து மாணவர்களுக்கு சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு இப்பள்ளி ஆசிரியை  பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                     போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் மிக அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்று பெற்ற சான்றிதழ்களை விகடன் நிருபர்களிடம் காட்டியபோது ,அவர்கள் வேறு எந்த பள்ளியும் இது போன்று சான்றிதகள் பெறவில்லை.உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment