Sunday 9 October 2022

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்  










 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான  தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் சொர்ணம்,ஜெயந்தி,ரங்கீலா , சுந்தரி ஆகியோர்  வழங்கினார்கள். ஆசிரியர்கள்  கருப்பையா, ஸ்ரீதர் , முத்துலெட்சுமி  ஆகியோர்   நிகழ்விற்கான  ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தமிழக அரசின் விலையில்லா புத்தகம்,நோட்டுகளை பெற்றோர்கள்
ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்  வழங்கினார்கள்.

 

No comments:

Post a Comment