இளைஞர் எழுச்சி நாள்
அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள்
பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்கள் அப்துல்கலாமின் ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள்.
அப்துல் கலாமின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,கருப்பையா ,செல்வமீனாள் ஆகியோர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.இணையம் வழியாக கலாமின் சிறப்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.கலாமின் ஓவியத்தை வரைந்து அசத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,கருப்பையா , ,செல்வமீனாள் ஆகியோர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.மாணவர்கள் கலாமின் ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள்.
No comments:
Post a Comment