Saturday 2 October 2021

 காந்தி பிறந்த நாள்

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல்

 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்டது.
                                                      
                     
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டதேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள்,கருப்பையா  ஆகியோர்அண்ணலின் பிறந்த  தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.இணையம் வழியாக மகாத்மா காந்தியின்  பிறந்த நாளில் அவர் போதித்த உண்மை, அகிம்சை, எளிமை, நல்லிணக்கம் ஆகியவற்றை மாணவர்கள் பின்பற்ற  உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்  என்றும், மகாத்மாவின்   சிறப்புகளை  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள்,கருப்பையா  ஆகியோர்அண்ணலின் பிறந்த  தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

No comments:

Post a Comment