தமிழக அரசின் விலையில்லா புத்தகம் வழங்கும் விழா
தேவகோட்டை
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் தமிழக
அரசின் விலையில்லா
புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கும் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்..அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிமணி புத்தகங்களை வழங்கினார்.
ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர்,செல்வமீனாள், முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான
ஏற்பாடுகளை செய்து
இருந்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் தமிழக
அரசின் விலையில்லா இரண்டாம் பருவ புத்தகங்களை தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிமணி வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் , ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர்,செல்வமீனாள், முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான
ஏற்பாடுகளை செய்து
இருந்தனர்.
வீடியோ
https://www.youtube.com/watch?v=Y2wNpvvlnZM
No comments:
Post a Comment