Friday 9 July 2021

 சத்துணவு சாப்பிடும்  மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

எல்.ஐ.சி. மேலாளர் வழங்கினார்









 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

                               கொரோனா தொற்று பரவலால் பல   மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில்,  சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக வினியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர் பொருள்களை தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சுரேஷ்  வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம்,எல்.ஐ.சி.கிளை உதவி மேலாளர் திலீப்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்களது பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று உலர் உணவு பொருள்களை வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசின் சார்பில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரசியும்,பருப்பும்,முட்டையும்  வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சுரேஷ்  சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம்,எல்.ஐ.சி.கிளை உதவி மேலாளர் தீலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கருப்பையா  ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். 



வீடியோ 

https://www.youtube.com/watch?v=-6eupa_2dKU







No comments:

Post a Comment