Thursday 29 July 2021

 நன்றி ! நன்றி ! நன்றி !



 

 

 

 

 நண்பர்களுக்கு வணக்கம். எங்களது பள்ளி தொடர்பான நிகழ்வுகளை தொடர்ந்து இணையம் வழியாக பார்த்து வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி வீடியோ பதிவாளர் திரு.குமரன் அவர்கள் மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாட ஒப்படைப்பு வழங்கும் நிகழ்வை பார்த்து , இது புதிய முயற்சியாக உள்ளது.எனவே அதனை வீடியோவாக பதிவு செய்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிடவேண்டும் என்று ஆர்வத்துடன் என்னை தொடர்பு கொண்டார்கள்.  எனது மொபைல் எண் அவர்களிடம் இல்லாததால் ஒரு நிருபரிடம் தொடர்புகொண்டு எனது மொபைல் எண்ணை பெற்று ஆர்வத்துடன் அதிகாலையில் தொடர்பு கொண்டு,  இன்று அதனை வீடியோவாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வீடியோவாக நாங்கள் செல்லும் பகுதியில் உள்ள பெற்றோரின் வீடுகளுக்கே வந்து பதிவு செய்து, அதனை மிக அருமையான முறையில் வீடியோவாக எடுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் திரு. நாசர் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அந்த நிகழ்வு மிக அருமையாக வெளியானது. இது எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்க கூடியதாக இருக்கின்றது. இதனை செய்தியாக எழுதி அனுப்பிய நாசர் அவர்களுக்கும்,  நிகழ்வை களத்தில் வந்து, எங்களுடன் பல்வேறு பகுதிகளுக்கும் இணைந்து வந்து நாங்கள் செல்லும் வீடுகளுக்குச் சென்று வீடியோவாக எடுத்த திரு.குமரன் அவர்களுக்கும், இதனை அருமையான முறையில் எடிட் செய்து வெளியிட்ட புதிய தலைமுறை நிர்வாகத்திற்கும், செய்திப்பிரிவுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.நல்ல விஷயங்களை,புதிய முயற்சிகளை உலகுக்கு எடுத்து சொல்ல உதவியாக இருக்கும் ஊடகத்திற்கு எனது நன்றிகள் பல.

 நன்றி கலந்த தோழமையுடன்,

லெ .சொக்கலிங்கம்,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment