Friday 2 July 2021

 குழந்தைகளுக்கு 1330 திருக்குறள்  எழுதும் போட்டி 

உடலுக்கும்,மனதுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்திய திருக்குறள் 

 அதிகமான மாணவர்கள் பங்கேற்று அசத்தல் 








 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே  திருக்குறள் எழுதும் போட்டியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்தமிழ் கல்வி நிலையம்   நடத்தியது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்குபெற்று அசத்தினார்கள்.இப்போட்டி உடலுக்கும்,மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தியததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

                                    சமீபத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து இணையம் வழியாக முத்தமிழ் கல்வி நிலையம் மூலமாக 1330 திருக்குறளையும் எழுதி அனுப்பும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குவதாக அறிவித்தனர். இதனை மாணவர்களுக்கு இணையத்தின் வழியாக தெரிவித்து, மாணவர்களின் குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதாலும், ஆசிரியர்களே மாணவர்கள்  எழுத   பேப்பர்களையும் வழங்கி , ஊக்கப்படுத்தி 10 நாட்களில் 1330 திருக்குறளையும் மாணவர்கள் எழுதி முடித்து அதனை ஆசிரியர்களே பெற்றுக் கொண்டனர் . 1330 திருக்குறளையும் தொடர்ந்து எழுதியது மாணவர்களுக்கு மனதளவிலும்,  கல்வி அளவிலும் மிகப் பெரிய நன்மை பயப்பதாக இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் பெரும்பாலான நேரங்கள் வீணான  நிலையிலும்,  திருக்குறள் எழுதுவதில் கவனம் செலுத்தியதால் 10 முதல் 15 நாட்கள் அவர்களுக்கு நல்ல பொழுதாக கழிந்ததாகவும்  பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் எழுதிய திருக்குறளை,  பெரும்,பெரும் நோட்டு கட்டுகளாக மாறிய திருக்குறளை பள்ளித் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், கருப்பையா, முத்துமீனாள், செல்வ மீனாள்,  முத்துலட்சுமி ஆகியோர் ஒன்றிணைந்து  பார்சல்களாக  கட்டி அவற்றை தபால் வழியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருக்கும் முத்தமிழ் கல்வி  நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்கள். முத்தமிழ் கல்வி  நிலையம் வாயிலாக  சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக  பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறினார். இப்பள்ளியில் இருந்து 34 மாணவர்கள்  1330 திருக்குறளையும் எழுதி அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகம் முழுவதும் இப்போட்டியை முயற்சி எடுத்து நடத்திய முத்தமிழ் கல்வி நிலையத்தின் கூட்டு முயற்சிக்கும் பள்ளி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே  திருக்குறள் எழுதும் போட்டியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்தமிழ் கல்வி நிலையம்   நடத்தியது. இதில் பள்ளியின் மாணவ மாணவியர் 34 பேர் 1330 குறட்பாக்களையும் எழுதி பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், செல்வமீனாள் ,  முத்துலட்சுமி , கருப்பையா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

மாணவர்கள் திருக்குறள் எழுதிய வீடியோ

 https://www.youtube.com/watch?v=ChAeFjjE5mM

 

 


No comments:

Post a Comment