Wednesday 28 July 2021

கற்போரை முன்னாயத்தப்படுத்திய மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டம்

எழுத ,படிக்க கற்றுக்கொண்டவர்களை  ஆர்வத்துடன் தேர்வுக்கு தயார்படுத்திய மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

 





 

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் எழுத,படிக்க கற்றுக்கொண்ட  முதியவர்களை தேர்வுக்கு    மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் முன்னாயத்தப்படுத்தி  வருகிறார்.

                                            தமிழ்நாடு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் , 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையமான நடராஜபுரம் பகுதியில் எழுத படிக்க தெரியாத பெரியவர்களுக்கு 
மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் கற்றுக்கொடுத்து வருகிறார்.சில நாட்களில் தேர்வு நடைபெற உள்ளதையொட்டி கற்போரை முன்னாயத்தப்படுத்தி ஆர்வத்துடன் சொல்லி கொடுத்தார்.கற்போரும் ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி படித்து வருகின்றனர்.மாற்று திறனாளி பெண் தன்னார்வலர் ஆர்வத்துடன் முதியவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.கற்போரை  முன்னாயத்தப்படுத்தி கொள்வதற்கான ஏற்பாடுகளை வீடுதோறும் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் எடுத்துக்கூறினார்கள்.  

 

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சிறப்பு பயிற்சி மையத்தில் தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் எழுத,படிக்க கற்றுக்கொண்ட  முதியவர்களை தேர்வுக்கு   மாற்று திறனாளி தன்னார்வலர் நந்தினி  ஆர்வத்துடன் முன்னாயத்தப்படுத்தி  வருகிறார்.கற்போரை  முன்னாயத்தப்படுத்தி கொள்வதற்கான ஏற்பாடுகளை வீடுதோறும் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியைகள் முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் எடுத்துக்கூறினார்கள்.  




No comments:

Post a Comment