Sunday 8 September 2019

 ஓவிய போட்டி : சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி சாதனை 





 

                             
       தேவகோட்டை- தேவகோட்டை எல்.ஐ.சி.,யில் நடந்த இன்சூரன்ஸ் வார விழா போட்டிகளில் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்.

                                                எல்.ஐ.சி யின் 63வது காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 3வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை நடைபெற்ற  ஓவிய போட்டியில்  இயற்கை காட்சிகள் வரைதலில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முதல் பரிசையும்,  3ம் வகுப்பு மாணவர் பிரிஜித்து இரண்டாம் பரிசையும்  பெற்றனர். பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.போட்டியில் பங்கேற்ற யோகேஸ்வரன்,ஓவியா,முத்தய்யன் ,பாலமுருகன்,ஆகாஷ்,அனுசுயா ஆகியோருக்கும்  உண்டியல் பரிசு,சான்றிதழ்  வழங்கிய எல்.ஐ.சி.,க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பட விளக்கம்: தேவகோட்டை எல்.ஐ.சி.,யில் நடந்த இன்சூரன்ஸ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்.

No comments:

Post a Comment